பதிவு செய்த நாள்
12
ஜூலை
2019
02:07
பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே, புத்திரகவுண்டன்பாளையம், தேவேந்திர நகர் மாரியம்மன், மதுரை வீரன் கோவில் தேரோட்டம், நேற்று (ஜூலை., 11ல்) மதியம், 3:00 மணிக்கு, வடம்பிடித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
திரளான பக்தர்கள், முக்கிய வீதிகள் வழியாக, தேரை இழுத்துவந்து, நிலையை அடைந்தனர். இதையொட்டி, மூலவர், உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். இன்று, (ஜூலை., 10ல்) கூழ் ஊற்றுதல், ஊரணி பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.