ராஜபாளையம்: ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயிலில், ஆனிப் பெருந்திருவிழா கடந்த 6ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் சுவாமி மற்றும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.பெரியதேரில் மாயூரநாதரும், சிறிய தேரில் அஞ்சல்நாயகியும் சர்வ அலங்காரத்துடன் வீற்றிருந்தனர். பக்தர்கள் ’ஓம் நமச்சிவாயா’ கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். ரதவீதிகளில் சுற்றிய தேர், பின்னர் நிலைக்கு சென்றது. தொடர்ந்து வானவேடிக்கையும், பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் மகேந்திரன் செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு ராஜபாளையம் டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.