செஞ்சி: காரியமங்கலம் கருணா சாயி பாபா கோவிலில் சாய்பாபாவின் 101 ம் ஆண்டு ஆராதனை விழா நடந்தது.
செஞ்சியை அடுத்த காரியமங்கலம் கருணா சாயி பாபா கோவில் பாபாவின் 101 ஆம் ஆண்டு ஆராதனை விழா மற்றும் ராஜராஜேஸ்வரி விஜயதசமி விழா நடந்தது. இதை முன்னிட்டு காலை 9 மணி முதல் 12 மணி வரை வரை சாய்பாபாவுக்கு பக்தர்கள் நேரடியாக 1008 கலச பாலபிஷேகம் செய்தனர். பகல் 1 மணிக்கு பாபாவுக்கு சிறப்பு அலங்காரமும், மகாதீபாராதனையும் நடந்தது. ராஜராஜேஸ்வரிக்கு நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், குங்கும அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.