பதிவு செய்த நாள்
08
நவ
2019
12:11
ஈரோடு: கோவில்களில், நகைகளை காணிக்கையாக செலுத்த, அறநிலையத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
ஈரோடு, திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: காணிக்கையாக வழங்கும், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளில், கற்கள் இருந்தால், அதன் எண்ணிக்கை, மதிப்பு, இதர உலோகங்கள் எடை, இதை தனியாக பிரித்து, தங்கத்தின் எடை மற்றும் மதிப்பு அடங்கிய ரசீது, ஜியோமொலஜிஸ்ட் சான்றுடன் வழங்க வேண்டும். இதர நகை வழங்கும்போது, உள் பாகங்களில், கோவில் பெயர், உபயதாரர் பெயர், வழங்கப்பட்ட தேதி பொறிக்கப்பட வேண்டும். காணிக்கை நகைகளுக்கு, தாங்களே பொறுப்பு என, ஒப்புதல் கடிதம் வழங்க வேண்டும். காணிக்கை செலுத்துவோர்தான் வழங்க வேண்டும். மூன்றாம் நபரிடம் தந்தால் ஏற்கப்பட மாட்டாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.