Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கைலாசநாதர்
  அம்மன்/தாயார்: ஆனந்தவல்லி
  ஊர்: தரப்பாக்கம்
  மாவட்டம்: சென்னை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சூரிய கிரகணம், சந்திர கிரகணம், பிரதோஷம், சிவராத்திரி, காயத்ரி ஜபம், சுதர்சன ஹோமம்  
     
 தல சிறப்பு:
     
  பொதுவாக கிரகண நேரத்தில் அனைத்துக் கோயில்களின் நடை அடைக்கப்படும். ஆனால் இங்கு கிரகண வேளையில் நடை திறந்து, கிரகண துவக்கத்திலும், முடியும் நேரத்திலும் விசேஷ அபிஷேகம் செய்கின்றனர். இங்குள்ள மூலவர் மேற்கு நோக்கி அமைந்துள்ளது தலத்தின் சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 9 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் தரப்பாக்கம் சென்னை.  
   
போன்:
   
  +91 44-2248 4215, 98408 49924. 
    
 பொது தகவல்:
     
  இங்கிருந்து 6 கி.மீ தொலைவில் குன்றத்தூர் முருகன் கோயில் உள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  கல்வியில் சிறந்து விளங்க பக்தர்கள் இத்தலத்தில் பிரார்த்தனை செய்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  சிவனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தி தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர். 
    
 தலபெருமை:
     
  கிரகண பூஜை : சூரிய, சந்திர கிரகணம் நிகழும் நேரம் தோஷமானதாகக் கருதப்படுவதால், அவ்வேளையில் கோயிலை அடைத்துவிடுவர். ஆனால் இங்கு கிரகண வேளையில் நடை திறந்து, கிரகண துவக்கத்திலும், முடியும் நேரத்திலும் விசேஷ அபிஷேகம் செய்கின்றனர். இது கிரகண கோயில் என்பதை உணர்த்தும் விதமாக முன் மண்டபத்திலுள்ள ஒரு தூணில், சூரிய, சந்திரரை ராகு, கேது விழுங்கும் சிற்பம் உள்ளது.

கல்விக்காக யாகம் : மேற்கு நோக்கி அமைந்த சிவத்தலம் இது. கோயில் விஜயநகர கட்டடக் கலை பாணியில் உள்ளது. அம்பாள் ஆனந்தவல்லி, முருகன் சன்னதி அடுத்தடுத்து உள்ளன. பவுர்ணமியன்று மாலையில் பிரத்யங்கிரா, காயத்ரி மற்றும் சுதர்சன ஹோமம் நடக்கிறது. படிப்பு நன்றாக இருக்க விரும்புவோர் இதில் பங்கேற்கின்றனர்.

பாதை மாறிய ஆறு :
ஒரு சமயம் பெருமழை பெய்யவே, கோயில் அருகிலுள்ள அடையாறில் வெள்ளம் பெருகி, ஊருக்குள் புகும் அபாயம் உண்டானது. இவ்வேளையில் கரையில் இருந்த கோயில் தேர், ஆற்றின் குறுக்கே விழுந்தது. இதனால், வெள்ளத்தின் திசை மாறி, மக்கள் காப்பாற்றப் பட்டனர். இவ்வாறு, இக்கட்டான சூழ்நிலைகளில் பக்தர்களைக் காப்பவராக இங்குள்ள சிவன் அருளுகிறார்.
 
     
  தல வரலாறு:
     
  முற்காலத்தில் இங்கு தங்கியிருந்த சித்தர்கள், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். காலப்போக்கில் வழிபாடு நின்று, லிங்கம் மண்ணில் புதைந்து போனது, பிற்காலத்தில் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய சிவன், இங்கு லிங்கம் இருப்பதை உணர்த்தினார். கைலாசநாதர் என்ற பெயர் சூட்டப்பட்டது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பொதுவாக கிரகண நேரத்தில் அனைத்துக் கோயில்களின் நடை அடைக்கப்படும். ஆனால் இங்கு கிரகண வேளையில் நடை திறந்து, கிரகண துவக்கத்திலும், முடியும் நேரத்திலும் விசேஷ அபிஷேகம் செய்கின்றனர். இங்குள்ள மூலவர் மேற்கு நோக்கி அமைந்துள்ளது தலத்தின் சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar