Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பாலமுருகன்
  ஊர்: ஹார்விபட்டி
  மாவட்டம்: மதுரை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பங்குனி உத்திரம், வைகாசி விசாகம்  
     
 தல சிறப்பு:
     
  திருப்பரங்குன்றத்தை போலவே முருகனின் வேலுக்கு தினமும் அபிஷேகம் செய்வது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் ஹார்விபட்டி, மதுரை.  
   
போன்:
   
  +91 99409 03545 
    
 பொது தகவல்:
     
  முருகப்பெருமான் சன்னதி, ராகு,கேதுவுடன் விநாயகர் சன்னதி, துர்க்கை சன்னதி, தட்சிணாமூர்த்தி சன்னதி, மனைவியுடன் தனம் தரும் பைரவர் சன்னதிகள் உள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  திருமணத் தடை நீங்கவும், நினைத்த காரியம் நடக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள் 
    
நேர்த்திக்கடன்:
    
  பெண்கள் விளக்கேற்றி வழிபடுகிறார்கள், சனிக்கிழமைகளில் தோலுடன் கூடிய உளுந்தம் பருப்பை வேகவைத்து, படைத்தால் திருமண தடை நீங்குவதுடன், சிறந்த மணவாழ்க்கை அமைகிறது என்பது பக்தர்கள் நம்பிக்கை. 
    
 தலபெருமை:
     
  முருகப்பெருமான் வேலுக்கு தினம் அபிஷேகமும், சஷ்டி, கார்த்திகை தினங்களில் சிறப்பு பூஜைகள், பவுர்ணமியன்று அன்னதானமும் நடக்கிறது. விநாயகர் சன்னதியில் தேய்பிறை சஷ்டி, சங்கடஹர சதுர்த்தி, தட்ஷிணாமூர்த்திக்கு வியாழன்தோறும் பூஜைகளும், குருபெயர்ச்சியன்று யாகமும் நடக்கிறது. பைரவருக்கு ஞாயிற்றுக்கிழமை களில் ராகுகால பூஜை நடக்கிறது என்றனர்.   
     
  தல வரலாறு:
     
  ஹார்விபட்டி 1940ல் உருவாக்கப்பட்டது. இந்நகரை உருவாக்கிய எஸ்.ஆர்.வரதராஜலு நாயுடு, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வைகாசி விசாகத்தன்று, இங்கு இருந்து மக்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்வை துவக்கி வைத்தார். 1940ல் துவங்கிய பால்குடம் நிகழ்ச்சி இன்றுவரை தொடர்கிறது.. தற்போது கோயில் உள்ள இடத்தில், 2002ல் ஸ்ரீபாலமுருகன் கோயில் உருவாக்கப்பட்டது. 2013 மார்ச்  மாதம் தனம்தரும் பைரவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: திருப்பரங்குன்றத்தை போலவே முருகனின் வேலுக்கு தினமும் அபிஷேகம் செய்வது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar