Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சிவ சுப்பிரமணியசுவாமி (ரணபலி முருகன்) திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு சிவ சுப்பிரமணியசுவாமி (ரணபலி முருகன்) திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சிவ சுப்பிரமணியசுவாமி (ரணபலி முருகன்)
  உற்சவர்: சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை
  அம்மன்/தாயார்: வள்ளி, தெய்வானை
  தல விருட்சம்: மகிழம் மரம்
  தீர்த்தம்: சரவணப்பொய்கை
  ஊர்: பெருவயல்
  மாவட்டம்: ராமநாதபுரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  தினசரி நான்கு கால பூஜை நடைபெறும் இக்கோயிலில் முருகனுக்குரிய முக்கிய தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. மாசியில் நடைபெறும் பிரம்மோற்சவமும், கந்த சஷ்டி விழாவும் இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. பதினாரு நாள் நடைபெறும் மாசிமாத பிரம்மோற்சவத்தில் 7 -ம் நாள் திருச்செந்தூரைப் போல் சண்முகர் சிவப்பு, வெள்ளை, பச்சை சாத்தி மூன்று காலங்களில் எழுந்தருள்வார். இது இறைவனின் ஆக்கல், அழித்தல், காத்தல் ஆகிய செயல்களைக் குறிக்கும். 10 -ம் நாள் தேரோட்டமும், 11 -ம் நாள் கோயில் தீர்த்தமான சரவண பொய்கையில் தீர்த்தவாரியும் நடைபெறும். ஏழுநாள் உற்சவமாகக் கொண்டாடப்படும் கந்தசஷ்டி திருவிழாவில் 6 -ம் நாள் பிரசித்தி பெற்ற சூரசம்ஹாரம் மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறும். அப்போது, கடலில் கண்டெடுக்கப்பட்ட அரிய சத்ரு சம்ஹார வேலைக் கொண்டு சூரனை முருகப் பெருமான் வதம் செய்யும் அற்புதக் காட்சியை பல்லாயி ரக்கணக்கான பக்தர்கள் கண்டு பரவசமடைவார்கள்.  
     
 தல சிறப்பு:
     
  பெருவயல் தலத்தின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்ப்பது இங்குள்ள சத்ரு சம்ஹார வேல். நான் எத்தனையோ தலங்களில் முருகனை தரிசித்திருக்கிறேன். ஆனால் வேலில் முருகன் உருவம் பதித்திருப்பதை பெருவயல் கோயிலில்தான் கண்டேன்! என்று திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள், முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் இதே அக்டோபர் மாதத்தில் இங்கு விஜயம் செய்தபோது குறிப்பிட்டிருக்கிறார். அதோடு தன் சொற்பொழிவுகளில் எல்லாம் அந்த வேலின் சிறப்பையும் எடுத்துக் கூறியிருக்கிறார். அந்த அருள் வாசகத்தை கோயிலில் அவர் புகைப்படத்தோடு பிரேம் போட்டு மாட்டி வைத்திருப்பதை இன்றும் காணலாம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சிவ சுப்பிரமணியசுவாமி (ரணபலி முருகன்) திருக்கோயில் பெருவயல்-623513, தேவிபட்டினம் வழி,ராமநாதபுரம் மாவட்டம்  
   
போன்:
   
  +91 9500847826 
    
 பொது தகவல்:
     
  இக்கோயிலில் கி.பி. 1741 -ம் ஆண்டு, ராமநாதபுரம் மன்னர் குமாரமுத்து விஜயரெகுநாத சேதுபதி காலத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டும், செப்÷ படுகளும் உள்ளன. அவை இக்கிராமத்தின் பெயரை, பெருவயல் கலையனூர் என்றும், மூலவரை, சிவசுப்பிரமணியசுவாமி என்ற ரணபலி முருகய்யா  எனவும்  குறிப்பிடுகிறது. குருக்களையே கிரையத்திற்கு வாங்கி, நித்ய பூஜை செய்வதற்காக அவர்களுக்கு நிலங்கள் கொடுத்து, கொல்லர், தச்சர் போன்றவர்களுக்கும் நிலங்கள் கொடுத்து,  நிர்வாகம் கணக்கு, முத்திரைக் கணக்கு, தான கணக்கு சரி பார்த்து கோயிலில் கைங்கரியம் தொடர்ந்து நடந்துவர வேண்டும் என்பதை அந்த சாசனங்கள்  தெரிவிக்கின்றன. அதன்படி இன்றும் கைங்கரியம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஐந்து நிலை ராஜகோபுரம் தாங்கிய கிழக்கு நோக்கிய கோயில். கோயிலின் நுழைவுவாயிலில் இரண்டு குதிரை சிலைகளைக் காணலாம். ஒரு குதிரையில், பத்ரகாளி உபாசகரான ஆதி மங்களேஸ்வர குருக்களும், அதற்கு எதிரேயுள்ள இன்னொரு குதிரையில் பத்ரகாளி அம்மன் திருவுருவமும்  அமைக்கப்பட்டிருப்பது வித்தியாசமான காட்சி. காலசந்தி மற்றும் சாயரட்சை பூஜையின்போது இவர்களுக்கு நைவேத்யம் செய்த பின்னரே பலிபீடத்திற்கு செய் யப்படுகிறது. ஜெயங்கொண்ட விநாயகரை தரிசித்துவிட்டு பலிபீடம், கொடிமரம், மயில் வாகனம், அர்த்த மண்டபம் கடந்தால் கருவறை. உள்ளே வள்ளி - தேவசேனா ச÷ மதராக ரணபலி முருகன் என்ற சிவசுப்பிரமணியசுவாமி கருணை பொங்கும் முகத்துடன் காட்சி தருகிறார். திருச்செந்தூர் முருகனை வழிபட்டால் கிடைக்கும்  பலன்கள் அனைத்தும் இவரை வழிபட்டாலே கிடைக்கிறதாம்.

பிராகாரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி, சண்முக சக்கரம், நாகரை தரிசிக்கலாம். கோயிலுக்கு வடக்கே தளவா வயிரவர் சேர்வைக்காரரின் சமாதி கோயில்  உள்ளது. அங்கு சுப்பிரமணிய யந்திரமும், சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தினமும் கோயிலில் இருந்து நிவேதனம் கொண்டு செல்லப்பட்டு அ ங்குள்ள லிங்கத்திற்கு பூஜை நடைபெறுகிறது. உற்சவர்களாக விநாயகர், வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணியர், வள்ளி - தெய்வானை சமேத சண்முகர் அருள்கிறார்கள். இவர்களையும், முருகன் உருவம்  பொறித்த அதிசய வேலையும், பிரம்மோற்சவ நாட்களிலும், சூரசம்ஹாரத்தன்றுமே பக்தர்களால் தரிசிக்கமுடியும். மற்ற நாட்களில், பாதுகாப்பாக வேறு இடத்தில்  இருக்கும் சத்ரு சம்ஹார வேலை சிறப்பு அனுமதியின் பேரில் கோயிலிற்கு கொண்டுவந்து, அதற்கு பக்தர்கள் சிறப்பு பூஜை செய்வதும் உண்டு. சத்ரு சம்ஹார ÷ வலை வழிபடுவோருக்கு எதிரிகள் தொல்லை விலகி, சகல பேறுகளும் கிட்டும் என்பது நம்பிக்கை. வெளி பிராகாரத்தில் யாகசாலையின் மேல் பகுதியில் கோயில் தலபுராணமும், கோயிலுக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகள் பற்றிய குறிப்புகளும் காணப் படுகின்றன.
 
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்களின் உள்ளத்தில் ரணத்தை ஏற்படுத்தும் கடன், பிணி, சத்ரு ஆகிய துன்பங்களையெல்லாம் பலி செய்து, அவர்களுக்கு சகல நன்மைகளும் அருள்வதால்,  ரணபலி முருகன்  என்ற பெயர் இவருக்கு ஏற்பட்டது.
 
    
நேர்த்திக்கடன்:
    
  முருகனுக்கு பாலபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி, அர்ச்சனை செய்யப்படுகிறது. 
    
 தலபெருமை:
     
  ருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமியையும், ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமியையும் ஒரே தலத்தில் தரிசித்து, அந்த இரு தலங்களுக்கும் சென்று வந்த புண்ணிய  பலனை ஒருசேரப் பெற பெருவயல் ரண பலி முருகன் கோயிலுக்கு செல்ல வேண்டும்.  ராமநாதபுரத்தில் பெரிய வயல்கள் சூழ்ந்த கிராமமாக இவ்வூர் திகழ்வதால் பெருவயல் என்றே அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் இவ்வூரில் மிகப் பெரிய  நெற்களஞ்சியம் இருந்துள்ளது.

இத்தலத்தில் மூலவராக வள்ளி - தேவசேனா சமேதராக அருள்பாலிக்கிறார், ரணபலி முருகன் என்ற சிவ சுப்பிரமணியசுவாமி, பிராகாரத்தில் ராமநாதசுவாமியும்,  பர்வதவர்த்தினியும் எழுந்தருளியுள்ளார்கள்.
 
     
  தல வரலாறு:
     
  ராமநாதபுரம் சமஸ்தானத்தை மன்னன் கிழவன் சேதுபதி ஆண்டு வந்த சமயம், அவரது நம்பிக்கைக்குரிய தளபதியாக விளங்கியர், சாத்தப்பன் என்கிற காத்த  வீரதளவா வயிரவன் சேர்வை.

முருக பக்தரான அவர் அடிக்கடி திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருவது வழக்கம். ஒரு நாள் அவர் கனவில் முருகன் தோன்றி, என்னை  வழிபட இனி திருச்செந்தூர் வர வேண்டாம். தேவிபட்டினம் கடலில் நவபாஷாண கற்கள் இருக்கும் இடத்துக்குக் கிழக்கில் கண்ணா முனை என்ற இடத்தில் மேலே  கருடன் வட்டமிடும். அதற்குக் கீழே கடலில் மாலையும் எலுமிச்சம் பழமும் மிதக்கும். அந்த இடத்தில் கடலுக்கு அடியில் வள்ளி - தெய்வானை சமேதராக சத்ரு  சம்ஹார வேலுடன் நான் இருப்பேன். என்னை எடுத்துச் சென்று உங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபடு! என்று கூறினார்.

இதேபோன்ற கனவு திருஉத்திரகோச மங்கை என்னும் தலத்தைச் சேர்ந்த ஆதிமங்களேஸ்வர குருக்களுக்கும் தோன்றியதால், இருவரும் மறுநாள் சந்தித்து, கந்தன்  கனவில் சொன்ன அடையாளங்களின்படி ஆட்களை விட்டு கடலுக்குள் முருகன் சிலையைத் தேடினார்கள்.

பலமணி நேரம் தேடியும் சிலை கிடைக்கவில்லை. கடலுக்குள் சென்றவர்கள் கடும் ரணத்துடன் திரும்பினார்கள். கடைசியில் வயிரவன் சேர்வையே கடலுக்குள் மூ ழ்கி அந்த சிலைகளையும் வேலையும் எடுத்து வந்தார்.

விஷயம் அறிந்த மன்னர், தன் அரண்மனையில் ராமலிங்க விலாசம்  என்ற தர்பார் மண்டபம் கட்டுவதற்காக வைத்திருந்த பொருட்களைத் தந்து பெருவயல்  ஊரணிக்கரையில் முருகனுக்கு கோயில் அமைக்க நிலங்களையும் இறையிலியாகக் கொடுத்து உதவினார்.

அதன்பின்னர் கோயிலிற்குப் பணிகள் விரைவாக நடைபெற்று, கடலில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் சிற ப்பாக நடைபெற்றது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் வழிபாட்டின் அடிப்படையில் பெருவயல் கோயிலிலும் பூஜைகளும், விழாக்களும்  நடைபெறுகின்றன.

வயிரவன் சேர்வை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி மீதும் அதிக பக்தி வைத்திருந்ததால், ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதிகளும் பெருவயல்  தலத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

கடலுக்குள் இறங்கி சிலையை எடுக்க முயன்ற பலருக்கு உடல் முழுவதும் ரணம் ஏற்பட்டதால், மூலவர் சிவசுப்பிரமணியசுவாமி, ரணபலி முருகன் என்றே  அழைக்கப்படுகிறார்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பெருவயல் தலத்தின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்ப்பது இங்குள்ள சத்ரு சம்ஹார வேல். நான் எத்தனையோ தலங்களில் முருகனை தரிசித்திருக்கிறேன். ஆனால் வேலில் முருகன் உருவம் பதித்திருப்பதை பெருவயல் கோயிலில்தான் கண்டேன்! என்று திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் இங்கு விஜயம் செய்தபோது குறிப்பிட்டிருக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar