பென்னாகரம் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30நவ 2019 12:11
பென்னாகரம்: பென்னாகரம் அருகே, ஸ்ரீனிவாசபெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுவதையொட்டி, காவிரியாற்றில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த கரியம்பட்டியில், 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு புதியதாக கட்டப்பட்டுள்ள, ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா வரும், 2ல் நடைபெறுகிறது. இதையொட்டி, நேற்று ஒகேனக்கல் காவிரியாற்றில் இருந்து, ஏராளமான பக்தர்கள் புனித நீர் எடுத்து வந்தனர். இவர்கள் பென்னாகரத்திலிருந்து போலீஸ் ஸ்டஷேன், தாலுகா அலுவலகம், கடை வீதி, பஸ் ஸ்டாண்ட், பி.டி.ஓ., அலுவலகம் வழியாக கரியம்பட்டிக்கு சென்றனர். தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.