சிங்கம்புணரி:சிங்கம்புணரி தேத்தாங்காடு சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நவ.,29 அன்று யாகசாலை பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள், சிறப்பு வேள்வி நடந்தது. நேற்று (டிசம்., 1ல்) காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடும், அதை தொடர்ந்து சிவச்சாரியார்கள் புனித நீர் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். சேவற் கொடியோன் சிவச்சாரியார் தலைமையில் சிறப்பு வேள்விகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர்.