புதுச்சேரி:மரத்திலான தங்கத் தேரில் மணக்குள விநாயகர் வீதியுலா உற்சவம் நடந்தது.ஆண்டுதோறும், கார்த்திகை மாத திருவாதிரை நட்சத்திரத்தன்று, நுாற்றாண்டு கண்ட பழமையான மரத் தங்கத் தேரில் மணக்குள விநாயகர் உற்சவர் வீதியுலா வருவது வழக்கம்.இதன்படி, மரத் தங்கத் தேரில் மணக்குள விநாயகர் வீதியுலா நேற்று முன்தினம் மாலை நடந்தது. மேள தாளங்கள் முழங்க மாட வீதிகளில் நடந்த வீதியுலா உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.உற்சவத்திற்கான ஏற்பாடுகளை, மணக்குள விநாயகர் கோவில் நிர்வாக அதிகாரி வேங்கடேசன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.