முதுகுளத்துார்:முதுகுளத்துார் செல்வி அம்மன் கோயிலில் கார்த்திகை கடைசி வெள்ளியை முன்னிட்டு மாங்கல்ய பூஜை நடந்தது. அம்மனுக்கு பால், சந்தனம், பன்னீர் உட்பட 21 வகை அபிேஷகம், தீபாராதனைகள் நடந்தது. அம்மனுக்கு மாங்கல்ய கயிறு அணியப்பட்டு பின்பு பெண்களுக்கு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் பூஜாரி குரு செய்திருந்தார். ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.