விழுப்புரம்: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, பக்த ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.விழுப்புரம் அடுத்த அரசமங்கலம் வரதராஜ பெருமாள் கோவிலில், உள்ள பக்தர் ஆஞ்சநேயர் சன்னதியில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 5:30 மணியளவில், விஸ்வரூப தரிசனம், 9:00 மணியளவில் சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, மாலை 6:30 மணியளவில் பக்த ஆஞ்சநேயர் வெண்ணைக் காப்பு, வடமாலை மற்றும் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.