நகரி கரியமாணிக்க பெருமாள் கோவிலில் பஞ்சாங்கம் வாசிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2026 10:03
நகரி: தெலுங்கு வருட பிறப்பை ஒட்டி நகரி கரியமாணிக்க பெருமாள் கோவிலில், புதிய பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம், நகரி டவுனில், திருப்பதி – திருமலை ஏழுமலையான் கோவிலின் உப கோவிலான கரியமாணிக்க பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் தெலுங்கு வருட பிறப்பை ஒட்டி மூலவருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நேற்று நடந்தது. தொடர்ந்து கோவில் குருக்கள் பிரசாத் புதிய வருடத்திற்கான பஞ்சாங்கம் வாசித்து நடப்பாண்டில் நடக்கும் சுபகாரியங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து பக்தர்களுக்கு தெரிவித்தார்.