விழுப்புரம் அனுமந்த் ஜெயந்தி பரத நாட்டியம் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2019 02:12
விழுப்புரம்: விழுப்புரம் தேவநாத சுவாமி நகரில் உள்ள ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில், அனுமந்த் ஜெயந்தி நிகழ்ச்சி நடந்தது.விழாவையொட்டி, நேற்று முன்தினம் 26ம் தேதி காலை 5:00 மணியளவில் சுப்ரபாதம், 11:30 மற்றும் பகல் 12:30, மாலை 6:00 மணியளவில் விசேஷ அலங்கார திருமஞ்சனம் நடந்தது. அனுமந்த் ஜெயந்தியை முன்னிட்டு, நாட்டிய பள்ளி மாணவிகளின் பரத நாட்டியம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.