* ‘வென்று விடுவோம்’ என்று திடமாக நம்புவதே வெற்றிக்கான மந்திரமாகும். * உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரிந்தவனே வாழ்வில் சாதிப்பான். * பிடித்தமான நற்செயலில் ஈடுபட்டால் மனச்சோர்வு ஏற்படாது. * கடவுள் அருள் ஒன்றே நமக்கு கிடைக்கும் உண்மையான பெருஞ்செல்வம். * மனஅமைதி என்பது வெளிஉலகில் இல்லை; நமக்குள் தான் இருக்கிறது. * அளவான பேச்சின் மூலம் எல்லையற்ற சக்தியை பெற முடியும். * ஒழுக்கத்தை பின்பற்றினால் செயல்கள் அனைத்திலும் ஒழுங்கு ஏற்படும். * துன்பத்தை போக்கும் ஒரே ஆயுதம் தன்னம்பிக்கையே. * பிறரை திருத்த எண்ணினால் முதலில் நாம் திருந்த வேண்டும். * தவறை உணர்வதே அதை தவிர்ப்பதற்கான முதல் படி. * புறம் பேசுவது என்பது மனிதனை அழிவு பாதைக்கு வழிவகுக்கும். * பிறரின் செயலில் தலையிடாமல் இருந்தால் பல நன்மைகள் கிடைக்கும். * மனிதனுக்கு பொறுமை தான் பலம். கோபம் தான் பலவீனம். * எவன் ஒருவன் தற்புகழ்ச்சி கொள்கிறானோ அவனின் வளர்ச்சி குறைய ஆரம்பிக்கும். * தெய்வத்தின் மீது நம்பிக்கை வைத்தால் அவர் என்றும் கைவிடுவதில்லை. * மற்றவரின் குறையை காணாமல், அவரது நிறைகளை காணுங்கள். * கடவுளுக்கு தொண்டு செய்வதே சிறந்த மகிழ்ச்சி. * துன்பங்களை கடவுளின் ஒப்படைத்தால் அவரே எல்லாம் பார்த்துக்கொள்வார். * செய்த தவறை உணர்பவர்களுக்கே கடவுளின் அருள் கிடைக்கும். * தியானம் ஒன்றே கடவுளை உணரச் செய்வதோடு நிம்மதியும் தரும். * நேரத்தை சரியாக பயன்படுத்துபவரே சாதனையாளராக மாறுகிறார். – அன்னை