Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவதிகை கோவிலில் யாக குண்டம் ... முத்துமாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாடலீஸ்வரர் கோவில் வைகாசிப் பெருவிழா: எல்லை கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2012
11:05

கடலூர்:கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் வைகாசிப் பெருவிழாவையொட்டி எல்லைக் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியையொட்டி கடந்த17ம் தேதி ஸ்ரீ வண்ணார மாரியம்மன் திருவிழா துவங்கியது. நேற்று முன்தினம் இரவு  11 மணிக்கு திருப்பாதிரிப்புலியூர் சோலை வாழியம்மன் கோவில் நிர்வாகம் மார்க்கெட் காலனி மக்கள் சார்பில் எல்லைக் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.அதனையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு சன்னதி தெரு-தேரடி தெரு சந்திப்பில் வண்ணார மாரியம்மனுக்கு பூஜை நடந்தது. பின்னர் பிடாரி அம்மனுக்கு பலி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் கையில் தீப்பந்தம், அரிவாளுடன் அண்ணா பாலம், வண்டிப்பாளையம் ரோடு ரயில்வே மேம்பாலம் சந்திப்பு, கூத்தப்பாக்கம் கான்வென்ட் மற்றும் கம்மியம்பேட்டை ரயில்வே கேட் வரை ஓடிச் சென்று எல்லை கட்டினர். இதன் தொடர்ச்சியாக நேற்று முதல் ஒருவர் நான்கு நாட்களுக்கு அரிவாளுடன் நான்கு சாலைகளிலும் வலம் வருவார். ஐந்தாம் நாள் புற்று மண் எடுத்து கொடுத்த பின் வரும் 26ம் தேதி பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா கொடியேற்றப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தினமும் இரவு அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடக்கிறது. வைகாசி பெருவிழா வரும் ஜூன் மாதம் 7ம் தேதி வரை நடக்கிறது. விழாக் காலங்களில் வேதபாராயணம், தேவாரம், நாதஸ்வரம் மற்றும் இன்னிசை கச்சேரிகள் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் மேனகா மற்றும் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை உதவி ஆணையர் பரணிதரன் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  திருவூடல் உற்சவ நிறைவு விழாவை யொட்டி,  உண்ணாமுலையம்மன் சமேத ... மேலும்
 
temple news
பொங்கல் பண்டிகையானது மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலிற்கு முதல்நாள் போகி பண்டிகை, ... மேலும்
 
temple news
பல்லடம்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அய்யன் கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில், ரோட்டில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி முன்பு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டுப்பொங்கல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar