பதிவு செய்த நாள்
24
மே
2012
11:05
திருக்கனூர் : கொடுக்கூர் அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஜானகிராமன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.திருக்கனூர் அடுத்த கொடுக்கூர் அய்யனாரப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 21ம் தேதி காலை 6 மணிக்கு கரிக்கோலம், சுவாமி பிரதிஷ்டையும், 22ம் தேதி காலை 9 மணிக்கு கோ பூஜை, கணபதி ஹோமம், யாகசாலை நிகழ்ச்சி நடந்தது.நேற்று 23ம் தேதி காø 6 மணிக்கு, இரண்டாம் கால வேள்வியும், 9.30 மணிக்கு அய்யனாரப்பன் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் வானூர் எம்.எம்,ஏ., ஜானகிராமன் உட்பட கொடுக்கூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.