காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை ஏகாதசி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2026 01:04
கோவை : கோவை மாவட்டம் காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் கால சந்தி பூஜை முடிந்து விஷ்வக்ஷேனர் பூஜை புண்ணியாவசனம் கலச ஆவாகனம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாத உற்சவமூர்த்திகளுக்கு ஸ்தபன திருமஞ்சனம். இதில் நெய் தேன் பால் தயிர் இளநீர் மஞ்சள் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் முடிந்து ரங்கநாதர் பச்சைப் பட்டுஉடுத்தி வெள்ளி சப்பரத்தில் வெண்பட்டு குடை சூழ மேள தாளம் முழங்க திருக்கோவில் வளாகத்தில் வலம் வந்து ஆஸ்தானம் சேர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சிம்மாசனத்தில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து உச்சகால பூஜை சாற்றுமறை மகாதீப ஆராதனை நடந்தது. இந்த வைபவத்தில் ஸ்தலத்தார்கள் வேதவியாச பட்டர் திருமலை நாலான் சக்கரவர்த்தி, அர்ச்சகர்கள் திருவேங்கடம் சுரேஷ் நாராயணன், சௌந்தர்ராஜன், மிராசு தாரர்கள் முத்துச்சாமி ஜெகநாதன், ஆனந்தன், கிருஷ்ணன் திருக்கோவில் செயல் அலுவலர், முத்துசாமி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.