திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம் விமர்சை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2026 11:04
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஓம் நமச்சிவாய கோஷமிட்டு பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அப்பர் சுந்தர் திருஞானசம்பந்தர் மாணிக்கவாசகர் என நால்வரால் பாடல் பெற்ற மிகவும் சிறப்பு வாய்ந்த கோவில் தலங்களில் ஒன்றாக விளங்கும் திருக்கழுக்குன்றம் ஸ்ரீ வேதகிரீஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது அதனைத் தொடர்ந்து ஏழாம் நாளான இன்று திருத்தேரோட்டம் கோவில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட திருத்தேர் அலங்காரம் செய்யப்பட்டு காலை 6:00 மணி அளவில் தேர் புறப்பாடு நடைபெற்றது. இந்த தேர்த்திருவிழாவில் 10,000 மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர் . செங்கல்பட்டு மாவட்டத்திலேயே வேதகிரிஸ்வரர் விநாயகர் முருகர் திருப்புரசுந்தரி சண்டிகேஸ்வரர் போன்ற ஐந்து தேர்தலை ஒன்றாக புறப்படு செய்து நான்கு மாட வீதியில் வீதி உலா வருகை தந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் . அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தீபம் வெற்றி சாமியை தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக வருகிற பத்தாம் நாள் அன்று தீர்த்தவாரி நடைபெற உள்ளது.