Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடைசி ஆசை இதுவே! பசுவை எந்த நாளில் வழிபட வேண்டும்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நினைத்தது நடக்கும்! சொன்னது பலிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2020
10:12

திருப்பூர் கிருஷ்ணன்

 எளிய கிராமத்து மனிதர் ஒருவர் காஞ்சி மகாபெரியவரை தரிசிக்க சங்கர மடத்திற்கு வந்தார். ‘‘ நமஸ்காரம் சுவாமி! பல தலைமுறைகளாக நாங்க ஜோசியம் சொல்லிப் பிழைக்கிற குடும்பம். என் தாத்தா, என் அப்பா வழியில் நானும் எனக்குத் தெரிந்த முறையில் ஜோசியம் பார்த்து பிழைப்பு நடத்துகிறேன்.  எனக்கு ஜோதிட ஞானம் எல்லாம் பெரிதாக கிடையாது. நல்ல நாள் கேட்டு வருவோரின் ராசி, நட்சத்திரத்திற்கு ஏற்ப நாள் குறித்துக் கொடுப்பேன். திருமண பொருத்தம் பார்த்து முகூர்த்தத்திற்கு நாள் குறிப்பேன். அவ்வளவுதான். சுவாமி. உங்களிடம்  ஒரு வேண்டுகோள் கேட்ட ஆசைப்படுகிறேன் சுவாமி’’
  ‘‘சொல்லு’’ என்றார் மகாபெரியவர்.
 ‘‘ சில புத்தகங்களைப் படிச்சு கொஞ்சம் ஜோசியம் தெரிஞ்சு வெச்சிருக்கேன். அந்த ஞானம் போதாதுன்னு நல்லாவே தெரியும். ஜோசியம் சொல்ல வாக்குப்பலிதம் அவசியம்வேணுமே?  நல்ல நாள் குறிச்சுக் கொடுத்தா, அதில நல்லது நடக்கணுமே? வாக்குப் பலிதம் இருந்தாத்தானே இது சாத்தியமாகும்?  வாக்குப் பலிதம் கிடைக்க என்ன செய்யணும்?`
கனிவுடன் பார்த்தபடி, ‘‘நான் ரெண்டு பாட்டு சொல்றேன். எழுதிக்கோ. ஜோசியம் பாக்கத் தொடங்கறதுக்கு முன்னாடி,
‘‘உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே’’
 இந்த பாட்டை மனதிற்குள் சொல்லி கடவுளை பிரார்த்தனை பண்ணிக்கோ.
அப்புறம் ஜோசியம் சொல்லத் தொடங்கு.  சொல்லி முடிந்ததும்,
‘‘நாடிய பொருள் கைகூடும்
   ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியதாக்கும்
  வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை
  நீறுபட் டழிய வாகை
சூடிய சிலை இராமன்
  தோள்வலி கூறு வார்க்கே’’
என்னும் பாட்டைச் சொல்லி ஸ்ரீராமனைப் பிரார்த்தனை பண்ணிக்கோ. நிச்சயம் நீ நினைச்சது நடக்கும். சொன்னது பலிக்கும்’’
 ‘‘சுவாமி! இந்த பாட்டுக்களை யார் எழுதினது?’’
 ‘‘இப்ப நான் சொல்லச் சொல்ல நீ தானே கண் முன்னே எழுதினே!’’ என்று சிரித்தார் மகாபெரியவா.
‘‘ கம்பர் எழுதிய பாடல்கள். மனத்துாய்மையுடன் இதை  பாடுபவருக்கு ஸ்ரீராமர், கம்பரின் அருளால் வாக்குப் பலிதம் உண்டாகும்’’ என்று சொல்லி குங்குமப் பிரசாதம் கொடுத்தார். ஜோதிடர் பிரசாதத்தைக் கண்ணில் ஒற்றியபடி மனநிறைவுடன் புறப்பட்டார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar