பதிவு செய்த நாள்
02
ஜன
2021
04:01
மேட்டுப்பாளையம்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, மேட்டுப்பாளையம், காரமடை பகுதிகளில் கோவில்களிலும், சர்ச்சுகளிலும் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தன.
காரமடை அரங்கநாதர் கோவிலில், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, அரங்கநாதப் பெருமாளுக்கு சிறப்பு அலங்கார பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அரங்கநாதப் பெருமாளை வழிபட்டு சென்றனர். மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, சக்தி விநாயகர் கோவிலில், புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் சர்ச்சில், புத்தாண்டை முன்னிட்டு, மூன்று சிறப்பு திருப்பலிகள் நடந்தன. பங்கு பாதிரியார் ரொசாரியொ தலைமையில், பாதிரியார் ரஞ்சித், டீகன் ஜானி ஆகியோர் திருப்பலிகளை நிறைவேற்றினர். திருப்பலிகளில் பங்கு மக்கள் பங்கேற்றனர். காரமடை சாலையில் உள்ள அற்புத கெபி ஆரோக்கிய அன்னை சர்ச்சில், பங்கு பாதிரியார் ஜேக்கப் திருப்பலிகளை நடத்தினார். இதில் ஏராளமான பங்கு மக்கள் பங்கேற்றனர். அதே போன்று ஊட்டி சாலையில் உள்ள, சி.எஸ்.ஐ., சர்ச்சிலும், புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு திருப்பலிகள் நடந்தன.