Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி கோத்தகிரி ... மேட்டுப்பாளையம் கோவில், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆங்கிலப் புத்தாண்டு: விழுப்புரம் கோவில்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2021
04:01

விழுப்புரம்: ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, கோவில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.விழுப்புரம், நேருஜி சாலையில் உள்ள வீரவாழிமாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.மயிலம்சுப்ரமணியர் சாமி கோவிலில் நேற்று காலை 6:00 மணிக்கு விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வாணை, சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. காலை 11:00 மணிக்கு விநாயகர், பாலசித்தர், மூலவர் சந்நிதிகளில் மகா தீபாரானை நடந்தது.

பிற்பகல் 12:00 மணிக்கு மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.செஞ்சிசெஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. நேற்று காலை 6:00 மணிக்கு மகா வீர ஆஞ்சநேயருக்கு, தங்க அங்கி அலங்காரத்தில் மகா தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.வெங்கட்ரமணர் கோவிலில் காலை 8:00 மணிக்கு பூதேவி, ஸ்ரீதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு திருமஞ்சனமும், தொடர்ந்து பூ அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது.செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை அம்மன் கோவிலில் நேற்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 20 வகை பூக்களால் அலங்கரித்து மகா தீபாராதனை நடைபெற்றது.திருவக்கரைவக்ரகாளியம்மன் கோவிலில் சந்திர லீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து காலை 11.00 மணிக்கு வக்கிர காளி அம்மனுக்கு நறுமணப் பொருட்களில் மகா அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் வக்ரகாளி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அவலுார்பேட்டைவீர ஆஞ்சநேயர் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, புஷ்ப அலங்காரத்தில் ஆஞ்சநேயருக்கு மகா தீபாரதனை நடந்தது. கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் ஒரு ரூபாய் நாணயம் வழங்கபட்டது.அவலுார்பேட்டையில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி அம்மன் வழிபாட்டு மன்றத்தில் உலக நன்மை வேண்டி சிறப்பு பிராத்தனை நடந்தது.தேவாலயங்கள்விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, கிறிஸ்து அரசர், சி.எஸ்.ஐ., செயின்ட் சேவியர், புனித ஜென்மராக்கினி உள்ளிட்ட தேவாலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது. தொடர்ந்து பிரார்த்தனையில் பங்கேற்றவர்கள் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையிலும் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை ... மேலும்
 
temple news
பெங்களூரு; உலக பிரசித்தி பெற்ற  மைசூரு தசரா விழாவை, சாமுண்டீஸ்வரி தேவிக்கு பூஜை செய்து, கன்னட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் அருகில், துாப்புல் வேதாந்த தேசிகர் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
கோவை; கோவை ரேஸ்கோர் சிலுள்ள சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்பாள் அன்னப்பட்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar