பதிவு செய்த நாள்
02
ஜன
2021
04:01
விழுப்புரம்: ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, கோவில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.விழுப்புரம், நேருஜி சாலையில் உள்ள வீரவாழிமாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.மயிலம்சுப்ரமணியர் சாமி கோவிலில் நேற்று காலை 6:00 மணிக்கு விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வாணை, சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. காலை 11:00 மணிக்கு விநாயகர், பாலசித்தர், மூலவர் சந்நிதிகளில் மகா தீபாரானை நடந்தது.
பிற்பகல் 12:00 மணிக்கு மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.செஞ்சிசெஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. நேற்று காலை 6:00 மணிக்கு மகா வீர ஆஞ்சநேயருக்கு, தங்க அங்கி அலங்காரத்தில் மகா தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.வெங்கட்ரமணர் கோவிலில் காலை 8:00 மணிக்கு பூதேவி, ஸ்ரீதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு திருமஞ்சனமும், தொடர்ந்து பூ அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது.செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை அம்மன் கோவிலில் நேற்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 20 வகை பூக்களால் அலங்கரித்து மகா தீபாராதனை நடைபெற்றது.திருவக்கரைவக்ரகாளியம்மன் கோவிலில் சந்திர லீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து காலை 11.00 மணிக்கு வக்கிர காளி அம்மனுக்கு நறுமணப் பொருட்களில் மகா அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் வக்ரகாளி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அவலுார்பேட்டைவீர ஆஞ்சநேயர் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, புஷ்ப அலங்காரத்தில் ஆஞ்சநேயருக்கு மகா தீபாரதனை நடந்தது. கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் ஒரு ரூபாய் நாணயம் வழங்கபட்டது.அவலுார்பேட்டையில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி அம்மன் வழிபாட்டு மன்றத்தில் உலக நன்மை வேண்டி சிறப்பு பிராத்தனை நடந்தது.தேவாலயங்கள்விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, கிறிஸ்து அரசர், சி.எஸ்.ஐ., செயின்ட் சேவியர், புனித ஜென்மராக்கினி உள்ளிட்ட தேவாலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது. தொடர்ந்து பிரார்த்தனையில் பங்கேற்றவர்கள் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.