திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது. கோவிலில் மூலவர் சன்னதியில் அன்னாபிஷேக அலங்காரத்தை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் அருகே உள்ள கல்யாண சுந்தரேசர் சன்னதியில் அன்னாபிஷேக நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் அருள் பாலித்தார்.