சோத்துக்குள்ளே சொக்கநாதர்: கோயில்களில் அன்னாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20அக் 2021 06:10
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பிரான்மலை மங்கைபாகர் தேனம்மை கோயிலில் உள்ள திருக்கொடுங்குன்றநாதருக்கு ஐப்பசி மாத பௌர்ணமி அன்னாபிஷேகம் நடந்தது. இதையொட்டி காலை 10:00 மணிக்கு சிவனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து காய்கறி அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் உமாபதி சிவாச்சாரியார் பூஜைகளை நடத்தி வைத்தார். இதேபோல் சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட சிவபுரிபட்டி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலிலும் முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலிலும் அன்னாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.