Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஹிந்துக்களின் அடையாளம் ராமஜென்ம ... கரிவரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: சொர்க்கவாசல் திறப்பு.. பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: சொர்க்கவாசல் திறப்பு.. பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

14 டிச
2021
06:12

திருச்சி: ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு இன்று அதிகாலை நடைபெற்றது. பரமபத வாசலை கடந்து நம்பெருமாள் ரத்தின அங்கி பாண்டியன் கொண்டை கிளி மாலை உள்ளிட்ட ஆபரணங்கள் தரித்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

பூலோக வைகுண்டம் என்று சிறப்பித்து சொல்லப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானது. இதில் மார்கழி மாதம் 20 நாட்கள் திருவத்யயன உற்சவம் என்ற வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா நடக்கும்.  இந்த விழா நாலாயிர திவ்வியப்பிரபந்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பகல் பத்து, இராப்பத்து என்று இரண்டு பகுதிகளாக நடத்தப்படுகிறது. பகல் பத்து நாட்களில் பெருமாள் முன் அரையர்கள் தீந்தமிழ் திருமொழிப் பாசுரங்களைப் அபிநயத்தோது பாடுவார்கள். இராபத்து துவக்க நாளின் அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக உற்சவர் ஆயிரங்கால் மண்டபம் வருவார். அங்கு 10 நாட்கள் திருவாய்மொழிப் பாசுரங்கள் பாடப்படும். பகல் பத்து திருநாள் கடந்த 4ம் தேதி தொடங்கியது. அன்று முதல் உற்சவர் ஸ்ரீ நம்பெருமாள் தினமும் அதிகாலையில் புறப்பட்டு, கோயில் அர்ஜுன மண்டபத்தில் ஆஸ்தானமிருந்து திருமொழிப் பாசுரங்களைக் கேட்டு வருகிறார். பகல் பத்து உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று (13ம் தேதி) ஸ்ரீ நம்பெருமாள் மோகினி அலங்காரம் என்ற நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

முக்கிய நிகழ்ச்சியான இன்று பரமபத வாசல்  திறப்பு அதிகாலை நடைபெற்றது. உற்சவர் ஸ்ரீ நம் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து சிம்மகதியில் புறப்பட்டு, காலை 4.45 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டது. அதன் வழியே அடியார் திருக்கூட்டம் புடை சூழ பரமபத வாசலை கடந்து நம்பெருமாள் ரத்தின அங்கி பாண்டியன் கொண்டை கிளி மாலை உள்ளிட்ட ஆபரணங்கள் தரித்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

பரமபத வாசல் திறப்பின் காலை 4.45 மணிக்கு பக்தர்களுக்கு  அனுமதி இல்லை. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை அமலில் உள்ளதால் இந்த ஆண்டும் பெருமாள் புறப்பாட்டின் போது பணியாளர்கள் தவிர பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இருப்பினும் பெருமாள் ஆயிரங்கால் மண்டபம் வந்து ஆஸ்தானம் சேர்ந்த பின் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு நாளை உள்;ர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வைகுந்த ஏகாதசி விழா ஏற்பாடுகளை அரங்கநாதர் கோயில் நிர்வாக அதிகாரியும்., இணை ஆணையருமான திரு.மாரிமுத்து தலைமையில் அர்ச்சகர்கள், கைங்கர்யபரர்கள் உட்பட பலர் செய்து வருகிறார்கள்.

19 ஆண்டுகளுக்கு ஒரு முறை: ஸ்ரீரங்கத்தில் இவ்வருடம் தை பிரம்மோற்சவம் நடைபெறும் என்பதால் சொர்க்க வாசல் திறப்பு முன்கூட்டியே கார்த்திகை மாதத்தில் நடைபெறுகிறது. 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்வாறு நடைபெறுவது வழக்கமாகும். கொரோனா கட்டுப்பாடு: கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, சொர்க்க வாசல் திறப்பு அன்று, ரெங்கா ரெங்கா கோபுரம் வழியாக காலை 7:00 முதல் இரவு 9:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இன்று, திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
மதுரை : சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை வந்த கள்ளழகர் பூப்பல்லக்கில் அழகர் கோவில் புறப்பட்டார். ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டுக்கான வைகாசி பிரம்மோத்சவம், கடந்த 11ம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி ரெணகாளிஅம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. பழநி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பில் மஞ்சள் நீர் உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar