சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி பால்குட ஊர்வலம் நடந்தது. ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று கிராமத்தார்கள் சார்பில் பால்குடம் எடுத்துச் சென்று சேவுகப்பெருமாள் ஐயனாருக்கு பாலாபிஷேகம் செய்வது வழக்கம். நேற்று காலை 9:30 மணிக்கு சந்திவீரன் கூடத்திலிருந்து கிராமத்தார்கள் சார்பில் பால்குட ஊர்வலம் புறப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடங்களை சுமந்து சென்றனர். காலை 10:30 மணிக்கு சேவுகப்பெருமாள் ஐயனாருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. சிங்கம்புணரி ஐயப்பன் கோயில், வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. விஷுக்கனி அலங்காரத்தில் மூலவர் காட்சியளித்தனர்.