விருத்தாசலம்: சதுர்த்தியொட்டி விருத்தாசலம் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள ஆழத்து விநாயகருக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அருகம்புல் மாலை சாற்றி, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதே போல், ஆற்றங்கரை சித்தி விநாயகர், காந்தி நகர் நர்த்தன விநாயகர், அய்யனார் கோவில் தெரு வழித்துணை விநாயகர், கடலுார் சாலை விஜய விநாயகர், பெரியார் நகர் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.