உடல்நிலை காரணமாக விரதத்தை தவிர்த்து சத்துள்ள உணவை உண்ணும்படி வைத்தியர் எனக்கு ஆலோசனை கூறுகிறார். என்ன செய்வது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஆக 2012 03:08
சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். உடம்பைக் கோயில் என்று திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். கடவுள் மீது பக்தி செலுத்த உடம்பு ஆதாரமாக இருக்கிறது. அதைப் போற்றிப் பாதுகாக்க ஒவ்வொருவரும் முயலவேண்டும். அதனால், முடிந்தால் மட்டுமே விரதத்தை மேற்கொள்ளுங்கள்.