திருவாலங்காடு: திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான வடாரண்யேஸ்வரர் கோவிலுடன் இணைந்தது திருவாலங்காடு பத்ரகாளியம்மன் கோவில். இந்த கோவிலில், ஆடி மாதம் 9 நாள் நடைபெறும் காளி உற்சவம் கடந்த 2ம் தேதி துவங்கியது.அதை தொடர்ந்து எட்டு நாட்கள், மாலை 7:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இன்று, காலை 6:00 மணிக்கு நிசும்பன் படுகளம் நடைபெற உள்ள நிலையில், 8ம் நாளான நேற்று, பத்ரகாளியம்மனுக்கு, கோவில் வளாகத்தில் நுாற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். ஆடி செவ்வாய் மற்றும் காளி உற்சவத்தை ஒட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.