Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளி கேடயத்தில் பிள்ளையார்பட்டி ... கருமுனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
100 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கஞ்சி கலயம் சுமந்து வினோத வழிபாடு
எழுத்தின் அளவு:
100 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கஞ்சி கலயம் சுமந்து வினோத வழிபாடு

பதிவு செய்த நாள்

23 ஆக
2022
06:08

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே பொசுக்குடி,பொசுக்குடி பட்டி கிராமத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கிராமமக்கள் பாரம்பரிய உணவுகளை சமைத்து கஞ்சி கலயம் சுமந்து பனை ஓலையில் வைத்து வினோத வழிபாடு நடத்தினர்.

முதுகுளத்தூர் அருகே பொசுக்குடி,பொசுக்குடி பட்டி கிராமமக்கள் நன்கு மழை பெய்து விவசாயம் செழிக்க வலியுறுத்தி காளியம்மன்​ கோயிலுக்கு கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பாரம்பரிய முறையில் உணவுகளான நெல் சோறு, கேப்பை கூழ்,மாவு வகைகள், வெங்காயம் ஒன்றாக சமைத்து கஞ்சி தயார் செய்தனர். பின்பு கிராமத்தில் உள்ள ஆண்கள் ,பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கஞ்சி கலயத்தை தலையில் சுமந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து கோயிலுக்கு சென்றனர். காளியம்மன்​ மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்புபூஜைகள்,தீபாரதனை நடந்தது. அதற்கு பின்பு தயார் செய்யப்பட்டுள்ள கஞ்சிகளை பாரம்பரிய முறையில்​ பனைஓலை மட்டையில் கிராமமக்களுக்கு பரிமாறி கொடுத்தனர். கிராமத்தில் பழமை மாறாமல் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாகவே பனை ஓலையில் உணவு வழங்கி வினோத வழிபாடு நடத்துவது தொடர்கிறது என்று கிராமமக்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா இன்று ... மேலும்
 
temple news
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar