Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அழகு வள்ளி அம்மன் கோயில் முளைப்பாரி ... உலகேஸ்வரர் கரிய காளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக தீர்த்த அழைப்பில் அமைச்சர் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
நத்தம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக தீர்த்த அழைப்பில் அமைச்சர் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

05 செப்
2022
07:09

நத்தம், நத்தம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி நடந்த தீர்த்தம், முளைப்பாரி அழைப்பு நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார். நத்தம் மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்றதாகும்.

இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்காக கோவில் முன் யாகசாலை அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி தீர்த்தம் மற்றும் முளைப்பாரி அழைப்பு நேற்று நடந்தது. முன்னதாக பரம்பரை பூசாரிகள் மற்றும் பக்தர்கள் கரந்த மலையில் புனித நீர் ஆடி , தீர்த்தங்கள் நிறைந்த குடங்களை எடுத்துக்கொண்டு நத்தம் மீனாட்சிபுரம் சந்தன கருப்புசாமி கோவிலுக்கு மேளதாளம் மற்றும் அதிர்வெட்டுகள் முழங்க வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அங்கிருந்து வெவ்வேறு குழுக்களாக 1000 முளைப்பாறியுடன் பெண்கள் மற்றும் தீர்த்த குடங்களை எடுத்துக்கொண்டு யானை மற்றும் குதிரை ஆட்டத்துடன் ஊர்வலமாக நத்தம் மாரியம்மன் கோவில் வந்து சேர்ந்தனர். ஊர்வலத்தில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, திண்டுக்கல் எம்.பி., வேலுச்சாமி, மாவட்ட கவுன்சிலர் க.விஜயன், முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்ஷா, நகரச் செயலாளர் ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர்கள் ரத்தினகுமார், பழனிச்சாமி, தர்மராஜன், மோகன், குடகிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி அழகர்சாமி,இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் பாரதி உள்ளிட்டோர் மற்றும் பல்லாயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar