Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளழகர் கோயில் நிலத்தை காட்டி ரூ.70 ... வைத்தீஸ்வரன் கோயிலில் மணிப்பூர் மாநில ஆளுநர் இல. கணேசன் சாமி தரிசனம் வைத்தீஸ்வரன் கோயிலில் மணிப்பூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கடையூர் கோவிலில் சுவிட்சர்லாந்து தம்பதியினர் சதாபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருக்கடையூர் கோவிலில் சுவிட்சர்லாந்து தம்பதியினர் சதாபிஷேகம்

பதிவு செய்த நாள்

05 நவ
2022
02:11

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனுறை அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் (80 ஆம் திருமணம்) சதாபிஷேகம் செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவார பாடல் பெற்ற அபிராமி அம்மன் உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் 60, 70, 80, 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சிறப்பு ஹோமங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் விருத்தி ஏற்படும் என்பது ஐதீகம். கோவிலுக்கு இன்று காலை சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டீபன் (82) அவரது மனைவி ஜானத்(79)  வந்தனர். கோ பூஜை, கஜ பூஜை செய்த அவர்கள் கோவில் வளாகத்தில் உள்ள பிச்சை கட்டளை மண்டபத்தில் ஆயுஷ் ஹோமம் செய்தனர். ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் கலசங்கள் கொண்டு தம்பதிகளுக்களுக்கு சதாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து  80 வது திருமணம் வைபவம் தொடங்கியது புத்தாடை அணிந்து மணமக்கள் தங்களுக்குள் மாலை மாற்றிக் கொண்டனர். ஒருவருக்கொருவர் பால் பழம் வழங்கும் பாரம்பரிய நிகழ்வுகளை தொடர்ந்து மணமக்களுக்கு ஆராத்தி எடுக்கப்பட்து. கோவிலுக்க வந்த பக்தர்கள் வெளிநாட்டு தம்பதியிடம் ஆசி பெற்று சென்றனர். தொடர்ந்து அவர்கள் சுவாமி, அம்பாள், கால சம்ஹார மூர்த்தி சன்னதிகளுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 
temple news
கோவை; கோவை - பொள்ளாச்சி ரோடு ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் - வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பழநி; பழநி, திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் அர்த்தமண்டவ கதவில் வெள்ளித் தகடுகள் பதிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar