Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரதராஜ பெருமாள் கோவிலில் கூடாரவல்லி ... தினமலர் செய்தி எதிரொலி, மடப்புரத்தில் கூடுதல் உண்டியல்கள் தினமலர் செய்தி எதிரொலி, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோவிலில் எந்த முறையில் கும்பாபிஷேகம்?
எழுத்தின் அளவு:
பழநி கோவிலில் எந்த முறையில் கும்பாபிஷேகம்?

பதிவு செய்த நாள்

13 ஜன
2023
01:01

 பழநி கோவிலில் வரும், 27ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. கும்பாபிஷேகத்தில் ஆகம விதிகளுக்குட்பட்டு வேதமும், தமிழ் மூல மந்திரமும் ஓதப்படும், என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:: அரசு கொறடா கோவி செழியன்: திருவிடைமருதுார் தொகுதி, நாச்சியார் கோவில் பகுதியில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த அரசு ஆவன செய்யுமா?

அமைச்சர் சேகர்பாபு: இக்கோவிலுக்கு, 12 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, திருப்பணி நடந்து வருகிறது. மூன்று மாதங்களுக்குள் பணி முடித்து, கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

தி.மு.க., - கோவி செழியன்: அமைச்சருக்கு நன்றி. அக்கோவில் மடப்பள்ளியை, கான்கிரீட் கட்டடமாக மாற்றித்தர வேண்டும். அங்கு பயணியர் தங்கும் விடுதி கட்டித்தர வேண்டும். பழநி கோவில் கும்பாபிஷேகம், விரைவில் நடக்க உள்ளது. அக்கோவில் கும்பாபிஷேகம் தமிழில் நடக்குமா?

அமைச்சர் சேகர்பாபு: அவர் கோரியபடி பக்தர்கள் தங்கும் விடுதி கட்ட சாத்தியக்கூறுகள் இருந்தால், கட்டித் தரப்படும். பழநி கோவிலில், 27ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. முழுக்க முழுக்க தமிழில் அழைப்பிதழ் அச்சிடப்பட்டு உள்ளது. பழநி முருகன் கோவிலில், தமிழரின் பறைசாற்றும் வகையில், நுாற்றுக்கும் மேற்பட்ட ஓதுவாரை வைத்து, மந்திரங்கள் ஒலிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தி.மு.க., ஆட்சி வந்த பின், தேவாரமும், திருவாசகமும், அனைத்து கோவில்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. பழநி கோவில் கும்பாபிஷேகத்தில், ஆகம விதிகளுக்கு உட்பட்டு வேதமும் ஓதப்படும். தமிழ் மூல மந்திரமும் ஓதப்படும்.

கோவி செழியன்: கஞ்சனுார் கோவில் கும்பாபிஷேகம் நடந்து, 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அக்கோவிலில் இரண்டு தேர் இருந்தது. தற்போது தேரோட்டம் நடக்கவில்லை. தேரோட்டம் நடத்த வேண்டும். கோவிலுக்கு செயல் அலுவலர் நியமிக்க வேண்டும். விரைவில் மகாமக திருவிழா வர உள்ளது. நவ கிரி கோவில்களை புதுப்பித்து, மகாமகம் திருவிழா சிறப்பாக நடக்க, சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.

அமைச்சர் சேகர்பாபு: கஞ்சனுார் கோவில், 2006ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. போதிய நிதி ஒதுக்கப்பட்டு, கோவில் திருப்பணிகள் விரைவில் துவக்கப்படும். இவ்வாறு, விவாதம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை மாத பிரம்மோத்சவம், கடந்த 13ம் தேதி ... மேலும்
 
temple news
பொன்னேரி; பொன்னேரி, திருவாயற்பாடி சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் மற்றும் பாஷ்யகார ஸ்வாமி கோவில் உள்ளது. கடந்த, ... மேலும்
 
temple news
திருநீர்மலை; பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், பிரசித்திபெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar