Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு ... முத்துமாரியம்மன் கோவிலில் அலங்கார ரூபத்தில் அம்மன் உலா முத்துமாரியம்மன் கோவிலில் அலங்கார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலையில் தைப்பூச தேரோட்டம்: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
மருதமலையில் தைப்பூச தேரோட்டம்: பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

04 பிப்
2023
05:02

வடவள்ளி: கோவை, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், தைப்பூச தேர் திருவிழா, கோலாகலமாக நடந்தது.

முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகம், கந்தசஷ்டி, தைப்பூச தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு, தைப்பூச திருவிழா, கடந்த ஜனவரி 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜன., 29ம் தேதி முதல் பிப்., 3ம் தேதி வரை நாள்தோறும் காலையும், மாலையும் யாகசாலை பூஜை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, கற்பக விருட்சம், அனந்தாசனம், கிருத்திகை, கேடயம், சந்திரபிரபை, ஆட்டுக்கிடாய், பூதவாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா வந்தனர். தைப்பூச திருவிழாவின் ஏழாம் நாளான இன்று அதிகாலை, 3:00 மணிக்கு, கோ பூஜை செய்து, 3:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுப்பிரமணியசுவாமிக்கு, 16 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதிகாலை, 4:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தங்க காசு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்ந்து, காலை, 8:00 மணிக்கு, வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதன்பின், சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராய், வெள்ளை யானை வாகனத்தில் எழுந்தருளி, திருவீதியுலா வந்து, மேஷ லக்னத்தில் திருத்தேரில் எழுந்தருளினார். பகல், 12:20 மணிக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்தின் இடையே, தைப்பூச தேரோட்டம் நடந்தது. தைப்பூச தேர் திருவிழாவையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள், மருதமலையில் குவிந்தனர். 575 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar