பொம்மநாதபுரம் காளியம்மன் கோவில் திருவிழாவில் பாரி வேட்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மே 2023 07:05
சாணார்பட்டி, கோபால்பட்டி அருகே சிலுவத்தூர் பொம்மநாதபுரம் காளியம்மன், மாரியம்மன், விநாயகர் கோவில்களில் நடந்த சித்திரை திருவிழாவில் பாரிவேட்டை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி நேற்று மே 7 காலை தோரண மரம் நடுதல் மற்றும் விநாயகர் கோவிலில் பொங்கல் வைத்தல், பழக்கூடை அழைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தது. அன்று இரவு அம்மன் கரகம் ஜோடித்து வானவேடிக்கையுடன் அம்மன் அழைத்து வரப்பட்டது. இன்று காலை மாவிளக்கு, பூச்சட்டி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை பாரிவேட்டை எனும் புலி வேட்டை நிகழ்ச்சி நடந்தது. இதில் அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மேல் சட்டை அணியாமல் உடல் முழுவதும் சந்தனம் பூசி, தலையில் தலைப்பாகை கட்டி, அருவாள், ஈட்டி போன்ற ஆயுதங்களைக் கொண்டு புலி வேட்டை ஆடுவது போல் பாவனை செய்து நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியை சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு பார்த்து ரசித்தனர். இன்று காலை பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல் மற்றும் மாலை அம்மன் கரகம் மஞ்சள் நீராட்டத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.