Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சனி பிரதோஷம்: சிவனை வழிபட ஆண்டு ... கதை கேட்டா பணம் கொட்டும்
முதல் பக்கம் » துளிகள்
கல்வியாளர் போற்றும் காஞ்சி முனிவர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2023
04:07


காஞ்சி மஹாபெரியவரின் பக்தர்களில் ஒருவர் பேராசிரியர் முனைவர் மகாதேவன். ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தில் ஈடுபாடு கொண்ட இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் உயர்பதவியில் இருந்தார். சுவாமிகள் சென்னையில் முகாமிட்ட போதெல்லாம் அவரிடம் தத்துவம் பற்றி உரையாடுவது வழக்கம். இவர் ‘காஞ்சி முனிவர்’ என்னும் நுாலை ஆங்கிலத்தில் எழுதினார். பலரும் அதைப் படித்து மஹாபெரியவர் மீது ஈடுபாடு கொண்டனர்.
 
1961ல் கிரேக்க தலைநகர் ஏதென்சில் நடந்த தத்துவ அறிஞர்கள் மாநாட்டில் மகாதேவன் பங்கேற்றார். துறவிக்கான விதிமுறைகளை முழுமையாக பின்பற்றும் முனிவர் ஒருவர் இந்தியாவில் இருப்பதாக அங்கு அவர் தெரிவிக்க பலரும் சுவாமிகளை தரிசிக்க விரும்பினர். அதில் கிரேக்க ராணி பிரடரிக்கா, அவரது மகள் இளவரசி ஐரனி குறிப்பிடத்தக்கவர்கள். முதல் முறையாக ஆந்திராவிலுள்ள காளஹஸ்தியில் மஹாபெரியவரை அவர்கள் தரிசித்தனர். கிரேக்கம் பற்றிய விஷயங்களை விரிவாக சுவாமிகள் பேசியதை கேட்டு ராணி வியந்தார். அதன் பின்னர் தரிசனத்திற்காக மூன்று முறை இந்தியாவுக்கு வந்தார் ராணி.  
இதே போல இன்னொரு மறக்க முடியாத அனுபவம் ஒன்றும் மகாதேவனுக்கு ஏற்பட்டது.   அவருக்கு சஷ்டியப்த பூர்த்தி நடந்தது. அதற்காக காஞ்சி மடத்திற்கு சென்ற போது ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பட்டு சால்வை வழங்கினார். காஞ்சி மஹாபெரியவர் வெள்ளை ஆடை ஒன்றை வழங்கினார். ஆடையைத் தொட்ட போது அது சொரசொரப்பாக இருப்பதை உணர்ந்தார் மகாதேவன்.
 ‘காட்டுக்குச் சென்ற ராமர் ஒரு துறவி போல இப்படி மரப்பட்டையை ஆடையாக உடுத்தினார். நாட்டுக்குள் வாழ்ந்தாலும் நீயும் துறவி போல பற்றின்றி வாழ்வதால் உனக்கும் சொரசொரப்பான ஆடையையே கொடுத்தேன். தத்துவத்துறையில் தேர்ச்சி பெற்ற உனக்கு மடத்தின் சார்பாக பட்டு சால்வையும் வழங்கினோம்’ என்றார் காஞ்சி மஹாபெரியவர். சுவாமிகளின் கருணை, அன்பை எண்ணி கண்ணீர் சிந்தினார் மகாதேவன்.   

 
மேலும் துளிகள் »
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூரில் அமைந்து உள்ளது திரு மல்லேஸ்வரா கோவில். சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா மங்களூரு தாலுகாவில் உள்ளது இனோலி கிராமம். இப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்று ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா மாவட்டம், புராதன கோவில்களுக்கு பெயர் பெற்றது. இதில் பன்ட்வால் தாலுகாவின் பொளலி ... மேலும்
 
temple news
ராம்நகர் மாவட்டம் கனகபுராவின் கப்பாலு கிராமத்தில் அமைந்து உள்ளது ஸ்ரீ கப்பாலம்மா கோவில். இங்கு சக்தி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar