Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ... அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ரூ.50 லட்சம் காணிக்கை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ரூ.50 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் மாரியம்மன் கோயில் கொடைவிழா
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் மாரியம்மன் கோயில் கொடைவிழா

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2023
11:07

திருச்செந்துார்: திருச்செந்துாரில், மேலத்தெரு யாதவ சமுதாய மாரியம்மன் கோயில் கொடை விழாவும், சுடலைமாட சுவாமி கோயில் கால்நாட்டு விழாவும் நடந்தது. திருச்செந்துார், மேலத்தெரு, யாதவ சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோயில்
கொடை விழா நடந்தது. இதை முன்னிட்டு, கடந்த 16ம் தேதி இரவு அம்மனுக்கு மாக்காப்பு தீபாராதனை நடந்தது. 17ம் தேதி பகலில் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமாகி, தீபாராதனை நடந்தது. 18ம் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி, தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் கும்பம் வீதி உலா வந்தது. மாலையில் திரளான பக்தர்கள், பால்குடம் எடுத்து நகர்பகுதி சுற்றி கோவிலுக்கு வந்தனர். பின்னர் இரவு 7:00 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். 19ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு படைப்பு தீபாராதனை நடந்தது. பகல் 1:00 மணியளவில் மஞ்சள் நீராட்டு தீபாராதனையும், அம்மன் கும்பம் ஊரில் வலம் வரும் நிகழ்ச்சியும், மாலையில் நகர்பகுதியில் முளைப்பாரி ஊர்வலமாக வந்து, கடலில் பிரி செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது.

சுடலை மாடசுவாமி கோயில் : இதேபோல், மேலத்தெரு யாதவ சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுடலை மாடசுவாமி கோயில் கொடை விழா, வரும் 24ம் தேதி துவங்கி 26ம் தேதி வரை 3 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கிறது. இதையொட்டி, நேற்று முன்தினம் 18ம் தேதி பகல் 11:45 மணியளவில் மாரியம்மன் கோயிலில் இருந்து திருக்கால், சுடலைமாட சுவாமி கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. பின்னர் சுடலைமாட சுவாமி கோயிலில் திருக்கால் நாட்டு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து
கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, மேலத்தெரு யாதவ மகா சபை மற்றும் கொடை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தாடிக்கொம்பு; தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் மூலவருக்கு தங்க முலாம் பூசிய நாகாபரண ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலய திருப்பணி தொடங்கியது. ... மேலும்
 
temple news
கோவை; கோவை, பொன்னைய ராஜபுரம் அருகே உள்ள சொக்கம்புதூர் ஸ்ரீகிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள செல்வ ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, இரு ஆண்டுகளாக, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar