வீட்டில் பிரமாண்ட விளக்கேற்றி வழிபட்டார் பிரதமர் மோடி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2024 11:01
புதுடில்லி: வீட்டில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினார் பிரதமர் மோடி.
அயோத்தியில் இன்று ராமர் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ராமர் கோயில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பிராண பிரதிஷ்டை செய்து வழிபட்டார். தொடர்ந்து தனது வீட்டில் பால ராமர் படத்திற்கு விளக்கேற்றி, வைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட விளக்குகளில் தீப ஒளி ஏற்றி வழிபட்டார்.தொடர்ந்து நாடு முழுதும் பிரசித்தி பெற்ற கோயில்களில் விளக்கேற்றப்பட்டது. பிரதமர் மோடியை தொடர்ந்து ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், தனது வீட்டில் விளக்கேற்றி வழிபட்டார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானும் தனது வீட்டில் விளக்கேற்றி வழிபட்டார்.