Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்னாளபட்டி மாரியம்மன் கோயில் விழா தினமலர் செய்தியால் சுடர்விடும் திருப்பரங்குன்றம் கோயில் அணையா விளக்குகள் தினமலர் செய்தியால் சுடர்விடும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஞானவாபி மசூதியில் வழிபாடு நடத்த ஹிந்துக்களுக்கு அனுமதி வழங்கியது நீதிமன்றம்
எழுத்தின் அளவு:
ஞானவாபி மசூதியில் வழிபாடு நடத்த ஹிந்துக்களுக்கு அனுமதி வழங்கியது நீதிமன்றம்

பதிவு செய்த நாள்

31 ஜன
2024
04:01

வாரணாசி: உ.பி., மாநிலம் ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் சீல் வைக்கப்பட்ட இடத்தில் வழிபாடு நடத்திக்கொள்ள ஹிந்து தரப்புக்கு வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

உ.பி., மாநிலம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற விஸ்வநாதர் கோவிலை ஒட்டி, ஞானவாபி மசூதி உள்ளது. இதன் ஒருபக்க வெளிப்புற சுவரில், ஹிந்து கடவுளின் உருவங்கள் உள்ளன. இவற்றை வழிபட இதுவரை, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஹிந்து கடவுள் உருவங்களை தினமும் வழிபட அனுமதிக்கக் கோரி, ஹிந்து பெண்கள் மற்றும் ஹிந்து அமைப்புகள் சார்பில், வாரணாசியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை ஏற்ற நீதிமன்றம், மசூதி வளாகத்தில் ஆய்வு செய்து, வீடியோவாக பதிவு செய்து தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதற்காக, ஐந்து பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். மசூதியில் உள்ள சிறிய குளத்தில், சிவலிங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக, மனுதாரர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியை, சீல் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றமும், சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியை பாதுகாக்கும்படி உத்தரவிட்டு உள்ளது.

இன்று(ஜன.,31) இது குறித்த வழக்கு வாரணாசி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‛‛ ஞானவாபி மசூதியில் சீல் வைக்கப்பட்ட இடத்தில் ஹிந்து தரப்பினர் வழிபாடு நடத்திக் கொள்ளலாம். இதற்காக தடுப்புகளை அகற்றி பூஜை செய்வதற்கான வசதியை 7 நாட்களுக்குள் மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும். காசி விஸ்வநாதர் கோயிலை சேர்ந்த அர்ச்சகர் வழிபாடு நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar