Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தை அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த ... உலக நன்மைக்காக திருப்பதியில் அயோத்தியா காண்டம் அகண்ட பாராயணம்; 11ல் நடக்கிறது உலக நன்மைக்காக திருப்பதியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தை அமாவாசை; புனித தீர்த்தங்களில் குவிந்த பக்தர்கள்.. தர்ப்பணம் செய்து வழிபாடு
எழுத்தின் அளவு:
தை அமாவாசை; புனித தீர்த்தங்களில் குவிந்த பக்தர்கள்.. தர்ப்பணம் செய்து வழிபாடு

பதிவு செய்த நாள்

09 பிப்
2024
10:02

மயிலாடுதுறை; பூம்புகார் உள்ளிட்ட புனித தீர்த்தங்களில்  நீராடிய பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.

ஒவ்வொரு அமாவாசை அன்றும்  முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட வேண்டும். இதில் தை அமாவாசை அன்று தர்ப்பணம்  கொடுத்து முன்னோர் வழிபாடு செய்வது சிறப்பு வாய்ந்தது.  உத்திராயண புண்ணிய காலத்தில் வரும் தை அமாவாசை பிதுர் வழிபாட்டிற்கு உகந்த நாளாக கூறப்படுகிறது. இந்நாளில் புனிதமான கடற்கரைகள், புண்ணிய நதிக்கரை, தீர்த்தங்களின் நீராடி வேத விற்பனர்கள் வழிகாட்டுதலுடன் இறந்தவர் வழிபாட்டிற்குரிய பூஜைகள் செய்வது போற்றப்படுகிறது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை புனித புண்ணிய நதிக்கரையான காவிரி துலா கட்டம், பூம்புகார் காவிரி சங்கமத்துறை, திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ருத்ரபாதம் ஆகிய இடங்கள் பிதுர் பூஜை செய்வதற்குரிய தலங்களாக    போற்றப்படுகின்றன. தை அமாவாசை தினமான இன்று பூம்புகார் கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு கடற்கரை மற்றும் காவிரி சங்கமத் துறையில் புனித நீராடி வேத விற்பனர்கள் வழிகாட்டுதலுடன் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்திலும் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். இதுபோல சீர்காழி அருகே உள்ள திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் உள்ள அக்னி சூரிய சந்திர தீர்த்தங்களில் ஏராளமானோர் புனித நீராடி ருத்ரபாதம் அமைந்துள்ள இடத்தில் வேத விற்பன்னர்களின் வழிகாட்டுதலுடன் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர் கடற்கரைகள் மற்றும் புனித தீர்த்தங்களில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தவர்கள் பின்னர் அங்கிருந்து தங்களது வீடுகளுக்கு சென்று விளக்கேற்றி குலதெய்வ வழிபாடு நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
திருச்சி: கமலவல்லி நாச்சியார் திருப்பள்ளி ஓடம் மாசி தெப்பத்திருவழா ஏழாம் திருநாள் மாலை திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar