Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சை பெரிய கோவில் சித்திரை ... வடமதுரை மகா காளியம்மன் கோயிலில் ராகு கால பூஜை வடமதுரை மகா காளியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா; மண்குதிரை ஊர்வலம்
எழுத்தின் அளவு:
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா; மண்குதிரை ஊர்வலம்

பதிவு செய்த நாள்

06 ஏப்
2024
10:04

அவிநாசி; அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மண்குதிரை ஊர்வலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்.

சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற ஸ்தலம், கொங்கேழு சிவாலயங்களில் முதன்மை பெற்ற தலமாகவும் காசிக்கு நிகரான தீர்த்தம் கொண்டு காசியில் வாசி அவிநாசி என்ற போற்றுதலுக்கு உள்ளான தலம் உள்ளிட்ட பெருமைகளை கொண்ட அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது. சித்திரை தேர் விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் கொடியேற்றத்திற்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை நாளில் அவிநாசி அருகே உள்ள சின்னகருணை பாளையத்திலிருந்து ஊர் மக்கள் சார்பில் அவிநாசி மங்கலம் சாலையில் உள்ள ஆகாச ராயர் கோவிலுக்கு மண்குதிரையை அலங்கரித்து தோளில் சுமந்த படி ஊர்வலமாக சென்று வழிபடுவது காலம் காலமாக வழக்கத்தில் உள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 14ம் தேதி அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கொடியேற்றம் நடைபெறுகின்றது. அதற்காக நேற்று சின்ன கருணை பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து மண்குதிரையை மலர்களால் அலங்கரித்து பூஜையில் செய்து சப்பரத்தில் கட்டி அப்பகுதி இளைஞர்கள் தோளில் சுமந்தபடி பெரிய கருணை பாளையம், கவுண்டம்பாளையம், காசி கவுண்டம்புதூர், கோவை சேலம் பைபாஸ் சாலை வழியாக மங்கலம் சாலையை கடந்து ஊர்வலமாக ஆகாசராயர் கோயிலை அடைந்தனர். இதில் வழிநெடுகிலும் பொதுமக்கள் பக்தர்களுக்கு தண்ணீர், நீர் மோர் கொடுத்து வரவேற்றனர். அதன் பின்னர் ஆகாசராயர் கோவிலில் குதிரையை வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆகாசராயர் மற்றும் காத்தவராயருக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்கள் நேர்த்திக்கடனாக கோவில் வளாகத்திற்கு வெளியே காத்தவராயருக்கு கிடாய் வெட்டி வழிபட்டனர். இதில் சின்ன கருணை பாளையம் மற்றும் பெரிய கருணை பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மண் குதிரையின் சிறப்பு: காலங்காலமாக சின்ன கருணை பாளையத்தில் மண்குதிரையை ஊர் பொதுமக்கள் பங்களிப்பில் செய்து வந்தனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக மண் குதிரையை செய்து கொடுத்து வந்த உழவர் இறந்து விட்டதால் அவரது மருமகன் ஈரோடு மாவட்டத்தில் நம்பியூர் அருகே வேமாண்டபாளையத்தில் இத்தொழிலை செய்து வருகிறார். தற்போது கடந்த ஒரு மாத காலமாக மண் குதிரை செய்யும் பணி நடைபெற்று வந்தது. சுமார் 1100 கிலோ எடை கொண்ட மண் குதிரையை, 4 கிலோமீட்டர் தூரத்திற்கு கடும் வெயிலையும் பொருப்படுத்தாமல் பக்தர்கள் தோளில் சுமந்து ஊர்வலமாக செல்வார்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடபழனி; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா ‘சக்தி கொலு’ எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவிலில் 3ம் தேதி இரவு, கொடியேற்றத்துடன், நவராத்திரி ... மேலும்
 
temple news
சூலூர்; வீடுகள் கோவில்களில் நவராத்திரி விழா ஒட்டி, கொலு பொம்மைகள் வைத்து வழிபாடுகள் நடந்தன.நவராத்திரி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar