Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் ... திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வசந்தோற்சவம் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம் விமரிசை
எழுத்தின் அளவு:
சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம் விமரிசை

பதிவு செய்த நாள்

22 மே
2024
11:05

சேலம்: சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாகம் தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே பிரசித்தி பெற்றதும் மிகப் பழமை வாய்ந்ததுமான அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது இந்த திருக்கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டாலும்  வைகாசி விசாக  திருவிழா கடந்த 13ஆம் தேதி தொடங்கியது தினமும் காலை மற்றும் மாலையில் சுகவனேஸ்வரர் மற்றும் சொண்ணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு  அபிஷேகம் பூஜைகள் மற்றும் தினமும் மாலை நேரத்தில் திருவீதி உலா என பல்வேறு வைபவங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான வைகாசி விசாக தேர் திருவிழா இன்று நடைபெற்றது. இதனை ஒட்டி சுகவனேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணியளவில் சுகனேஸ்வரருக்கும் சொர்ணாம்பிகை தாயாருக்கும் பால் இளநீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது தொடர்ந்து உற்சவமூர்த்தியான சுகவனேஸ்வரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்மனுக்கு பட்டு ஆடைகள் உடுத்தி பல்வேறு வாசனை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ராஜகணபதி கோவில் முன்பு உள்ள தேருக்கு வண்ண மலர்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தேரில் சுகவனேஸ்வரர் மற்றும் சொர்ணாம்பிகை எழுந்தருளினார் இதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க மங்கள வாத்தியம் இசைக்க அர்ச்சனைகள் நடைபெற்றது பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதனை தொடர்ந்து சுகவனேஸ்வரர் சொர்ணாம்பிகை தாயாரின் திருத்தேரை  தொடங்கியது அங்கு கூடியிருந்த பக்தர்கள் நமச்சிவாயா நமச்சிவாய என விண்ணை மட்டும் அளவிற்கு கோஷங்களை எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர் இந்த தேரானது ராஜகணபதி கோவில் தொடங்கி இரண்டாவது அக்ரஹாரம் சின்ன கடைவீதி முதல் அக்ரஹாரம் வழியாக பவனி வந்து மீண்டும் ராஜ கணபதி கோவில் அருகே வந்தடைந்தது பின்னர் சிவாச்சாரியார் மகா தீபாரதனை காண்பித்தார் தேர் திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர் பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்த பின்னர் பிரசாதம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி தேர் செல்லும் சாலைகளில் மின்சார வயர்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் ஏராளமான  காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் திருத்தேரின் ஊர்வலத்தின்  போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க இன்று அப்பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை நடந்தது. மூலவர் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஐந்தாம் நாளான இன்று  நம்பெருமாள் சிவப்பு நிற ... மேலும்
 
temple news
கோவை: ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் 75-வது ஆண்டு பூஜா மகோத்சவம் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை 24ம் தேதி ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை, மருதமலை அடிவாரத்தில், 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை, ‘அமிக்கஸ் கியூரி’ எனும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பகுதிகளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar