ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் நம்மாழ்வார் அவதார உற்சவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2024 11:05
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஸ்ரீ ஆதிநாதர் கோவிலில் சுவாமி நம்மாழ்வார் திருவைகாசி திருஅவதார உற்சவம் 9ம்நாள் திருத்தேர் நடந்தது.
ஆழ்வார்திருநகரி; ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் சுவாமி நம்மாழ்வாருக்கு வைகாசி திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி அன்று முதல் சுவாமி ஒவ்வொரு வாகனத்தில் வீசி உலா வந்து அருள்பாலித்து வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று (22ம் தேதி) 9ம் திருநாளன்று காலை சுவாமி நம்மாழ்வார் திருத்தேருக்கு எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 23 ம் தேதி பத்தாம் திருவிழாவை முன்னிட்டு காலை மாடவீதி புறப்பாடு, பின்னர் சிங்கபெருமாள் சன்னிதியில் திருமஞ்சனம் தாமிரபரணி நதியில் தீர்த்த வாரியும் பெரிய சன்னதிக்கு எழுத்தருளி கோஷ்டி, தீர்த்த வினியோகம் நடக்கிறது. வரும் 24 காலையில் சுவாமி நம்மாழ்வார், மத்மனவாள மாமுனிகள் சன்னதிக்கு எழுத்தருளி கந்த பொடி உத்ஸ்வம், திருமஞ்சனம் கோஷ்டி பல்லக்கில் சன்னதிக்கு எழுந்தருளி ஆஸ்தானம் எழுந்தருளுல் நடக்கிறது. இரவு பல்லக்கில் சுவாமி நம்மாழ்வார் வீதிஉலாவும், 25ம் தேதி விடையாற்றும் நடக்கிறது.