சிவன் கோயில்களில் அம்மன் சந்நிதி முன் ரிஷபவாகனம் உள்ளதன் காரணம் என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2012 12:11
அம்பிகைக்குரிய வாகனம் சிங்கம். காளி, மாரி போன்ற தனிதேவதைகளுக்கு சிங்கம் இடம் பெற்றிருக்கும். சிவன் நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் போது பார்வதியுடன் ரிஷபவாகனத்தில் எழுந்தருளினர். இதனை அனுகிரஹகோலம் என்று சிறப்பித்துக் கூறுவர். அந்த அடிப்படையில் சுவாமிக்குரிய ரிஷபத்தை அம்மனுக்கும் வைப்பதுண்டு.