கோவை விஷ்ணு துர்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09செப் 2024 06:09
கோவை; ஆர். எஸ். புரம் கௌலி கிரவுண்ட் ரோடு, ..ஜிசிடி ஹவுஸிங் யூனிட் விஷ்ணு துர்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதில் மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் பொதுமக்கள் முன்னிலையில் கும்ப கலசத்திற்கு சிறப்பு புனித நீர் ஊற்றினர். இந்த விழாவானதுகடந்த 05ம் தேதி அன்று காலை 7 மணி அளவில் மங்கள வாத்தியம், மகா கணபதி பூஜை ஆகியன வற்றுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து காலை 11 மணியளவில் திருமூர்த்தி மலை , பவானி ,அவிநாசி ஆகிய திருத்தலங்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து கோவை காந்தி பார்க்கில் இருக்கும் முருகன் கோவிலில் வந்த சிறப்பு பூஜை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டது. இரண்டாம் நாள் வெள்ளிக்கிழமை 06ம் தேதி விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசகம், பஞ்சகவ்ய பூஜை, கணபதி லட்சுமி நவக்கிரக ஹோமம் ஆகியன நடந்தது. அதை தொடர்ந்து கோ பூஜை, அஸ்வத் பூஜை ஆகியன நடைபெற்றது. சனிக்கிழமை அன்று காலை மங்கள வாத்தியக்கள் முழங்க இரண்டாம் கால பூஜை நடைபெற்றது. நேற்று 8ம் தேதி காலை 05-30 மணி அளவில் நான்காம் கால யாக பூஜை தொடங்கியது. அதனையடுத்து விநாயகர் பூஜை, சூரிய பூஜை, மண்டல ஆராதனை ஆகியன நடைபெற்றது. காலை 8 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.