செஞ்சி: செஞ்சி பெரியகரம் சிவ சுப்பிரமணியர் கோவிலில் முருகப்பெருமான், வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடந்தது.செஞ்சி பெரியகரம் சிவசுப்பிரமணியர் கோவிலில் மூன்றாம் ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த மாதம் 13ம் தேதி துவங்கியது. முதல் நாள் திருமுருகன் தோற்றம், 2ம் நாள் தந்தைக்கு உபதேசன், 3ம் நாள் தாருகன் வதை, 4ம் நாள் சிங்கமுகன் வதை, 5ம் நாள் வேல் வாங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது.நேற்று முன்தினம் இரவு சூரசம்மார விழாவும், தொடர்ந்து திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.இதில் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு திருமணம் செய்யும் வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை பெரியகரம் பகுதி மக்கள் செய்தனர். இரவு சாமி வீதி உலா நடந்தது.