Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் ... திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம் திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீட்கப்பட்ட கோவில் முட்புதருக்கே சொந்தம் அறநிலையத்துறையால் தொடரும் அவலம்!
எழுத்தின் அளவு:
மீட்கப்பட்ட கோவில் முட்புதருக்கே சொந்தம் அறநிலையத்துறையால் தொடரும் அவலம்!

பதிவு செய்த நாள்

21 நவ
2024
11:11

பல்லடம்; அறநிலையத்துறையின் மோசமான செயல்பாடு காரணமாக, பல்லடம் அருகே, முட்புதரில் இருந்து மீட்கப்பட்ட கோவில், மீண்டும் முட்பதர்களுக்கே பரிசாக வழங்கப்பட்டுள்ளது.


பல்லடத்தை அடுத்த, மாதப்பூர் கிராமத்தில், 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த அனுமந்தராயர் கோவில் உள்ளது. இக்கோவில், பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் முட்புதர்களுக்குள் மூடப்பட்டு கிடந்தது. தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டியதை தொடர்ந்து, கடந்த, 2023 ஏப்., மாதம், முப்புதர்கள் அகற்றப்பட்டு, கோவில் வெளிக்கொண்டுவரப்பட்டது. இதனுடன், முட்புதர்களுக்குள் கிடந்த சில கல் தூண்கள், சிலைகள் உள்ளிட்டவையும் இருப்பது தெரியவந்தது. பழமை வாய்ந்த இக்கோவில், அறநிலையத்துறையின் செயல்பாடின்மை காரணமாகவே, புதர்களின் பிடியில் இருந்துள்ளது. மேலும், இக்கோவிலுக்கு சொந்தமாக, 50 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளதாகவும் கூறப்படும் நிலையில், அறநிலையத்துறை, இது குறித்தும் கண்டுகொள்ளாமல் உள்ளது. 


தினமலர் செய்தியை தொடர்ந்து, கோவிலை சூழ்ந்திருந்த முட்புதர்களை அகற்றி, கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிய அறநிலையத்துறை அதிகாரிகள், தொல்லியல் துறைக்கு தகவல் அளித்துள்ளதாகவும், விரைவில் புனரமைப்பு செய்யப்படும் என்றும் அறிவிப்பு பலகை ஒன்றையும் வைத்தனர். இதன்பிறகு, வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையும், காற்றில் கரைந்து போன நிலையில், கோவிலைச் சுற்றி மீண்டும் முட்புதர்கள் முளைத்து கோவிலை மூடி மறைத்துள்ளன. முந்தைய காலத்தில் எவ்வாறு புதர்களுக்குள் சிக்கி கோவில் காணாமல் போனதோ, அதே ஒரு சூழலை, தற்போது அறநிலையத்துறை உருவாக்கி வருகிறது. பல ஆண்டு காலமாக மாயமாகிக் கிடந்த கோவில், கண்டுபிடிக்கப்பட்டு, ஒரு ஆண்டு கடந்தும், இன்றுவரை, கோவிலை புனரமைப்பதற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன், மீண்டும் பழைய நிலைக்கே கோவிலை கொண்டு சென்று வரும் அறநிலையத்துறையின் செயல்பாடு, பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar