கோவை; பீளமேடு அஷ்டாம்ச வரதஆஞ்சநேயர் கோவிலில் கார்த்திகை மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆஞ்சநேயர் சிறப்பு வெண்ணை காப்பு கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அனுமனை தரிசனம் செய்தனர்.