Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தை அமாவாசை; இல்லத்திலும் ... திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தை அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
தை அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

29 ஜன
2025
10:01

ராமேஸ்வரம்; தை அமாவாசை தினத்தையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் தர்ப்பணம் செய்து, திதி கொடுக்க  குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.


உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் வெளி மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி ராமநாதசுவாமி  திருக்கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை தினங்களில் பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து திதி கொடுத்தனர். இந்த நிலையில் இன்று தை அமாவாசை தினத்தையொட்டி வெளி மாவட்டம், மாநிலத்தில்  இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, திதி கொடுத்து வழிபட்டனர். பின் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு உள்ளே உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து  சாமி தரிசனம் செய்தனர். தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் பகுதி முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை, தேவிபட்டினம், உள்ளிட்ட பகுதிகளில் புனித நீராடி தங்களை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar