Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எமதண்டீஸ்வரர் கோவில் திருப்பணியில் ... தண்டாயுதபாணி முருகன் கோயிலில் மிளகாய் சாந்து அபிஷேகம் தண்டாயுதபாணி முருகன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்துக்குமார சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு வசதி மேம்படுமா?
எழுத்தின் அளவு:
முத்துக்குமார சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு வசதி மேம்படுமா?

பதிவு செய்த நாள்

13 பிப்
2025
12:02

பல்லடம்; பல்லடம் பகுதியில் உள்ள பழமையான வரலாற்று சிறப்புமிக்க கோவில்களில், மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவில் பிரதானமானது. இங்கு, சிறிய குன்றின் மீது முருகப்பெருமான் அருள்பாலிப்பதால், கிரிவலம் சென்று பக்தர்கள் வழிபடுகின்றனர். தைப்பூசம் மட்டுமின்றி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட பல்வேறு விழாக்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், அடிப்படை வசதிகளோ பின்தங்கியுள்ளன. நுழைவாயிலை அடைந்ததும், கழிப்பிடம் உள்ளது. இதை கடந்து சென்ற பிறகே, கோவிலுக்குள் செல்ல முடியும். அருகே, கோவிலுக்கு சொந்தமான மண்டபமும் உள்ளது.

ஒவ்வொரு விழாக் களின் போதும், கழிப்பிடம் மற்றும் மண்டபத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர் ஆகியவை, பக்தர்கள் கோவிலுக்கு வரும் வழித்தடத்தில் தேங்கி நிற்கிறது. தைப்பூச தினமான நேற்று முன்தினமும், இதேபோல் தண்ணீர் தேங்கி நிற்க, வழித்தடம், சேறும் சகதியுமாக மாறியது. இந்த அவலத்துக்கு இடையே, இப்பகுதியில், கூடாரம் அமைத்து அன்னதானமும் வழங்கப்பட்டது. கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஒருபுறம், அன்னதானத்துக்காக நிற்கும் பக்தர்கள் மற்றொருபுறம் என, தாறுமாறாக இருந்த வரிசைகளால், பக்தர்கள் அவதிப்பட்டனர். கோவிலை ஒட்டியே, கோவிலுக்கு சொந்தமான இடம் அதிக அளவில் உள்ளது. பார்க்கிங் வசதி உட்பட, கழிப்பிடம் உள்ளிட்ட தேவைகளுக்கு அவற்றை பயன்படுத்தலாம். நுழைவு வாயிலில் இருந்து கோவிலுக்கு செல்லும் வழித்தடத்தை முறையாக பராமரிக்க வேண்டியதும் அவசியம். நுழைவாயிலில் உள்ள கழிப்பிடத்தை அகற்றி இடமாற்றம் செய்ய வேண்டும். நுழைவாயிலில் இருந்து கோவிலுக்கு வரும் வழித்தடத்தில் ரோடு அமைக்க வேண்டும். விழா காலங்களில், பக்தர்கள் வாகனங்களை நிறுத்த போதிய ‘பார்க்கிங்’ வசதி மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அறநிலையத்துறை மேம்படுத்த வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சண்முகர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி உற்சவத்தை ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம், இன்று (4ம் தேதி) ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் நாளை (5ம் தேதி) மாலை 6 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar